Saturday, July 6, 2013

கருவூரார் பெயர் காரணம்.

கரூரில் பிறந்த காரணத்தாலே தான் அவரு கருவூர் தேவர் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டு இருகின்றோம் ஆனால் நான் உடையார் நாவலில் ஒரு செய்தியை படித்தேன் அதில் கருவூராரிடம் ஒருவன் வந்து நீங்கள் பிறந்த கருவூர் எங்கு உள்ளது???? என்று கேட்க

அதற்கு அவர் என் தாயில் கருப்பைதான் என் ஊர், என் தாய் எங்கிருந்தால் என்று எனக்கு தெரியாது அதை பற்றி நான் கவலை படவில்லை என் தாயின் ஊருக்கு நான் வந்ததும் (கருப்பையில்) அந்த ஊர் பற்றி நான் தெள்ள தெளிவாக புரிந்துகொண்டுவிட்டேன் என் தாயின் ஊரின் நான் வளர்ந்த ஒரு ஒரு நொடியும் எனக்கு நினைவு இருக்கிறது வெறும் ஆத்மாவாக அங்கு இருந்ததும் நல் ஆதமாவாக மலரவைததும் அங்குதான் உடம்பில் உள்ள அவையங்களுக்கு புத்தி கட்டளையிட்டதும் நன்றாக நினைவில் இருக்கிறது

எல்லா மனிதர்களுக்கு கருவில் இருந்தது நினைவில் இராது அதானால் அவர்கள் மனிதன்ர்கள். கருவில் வாழ்ந்த காலம் எவனுக்கு நினைவில் இருகின்றதோ அவன் தேவன். நான் சாதாரண மனிதன் அல்ல மனிதற்கு மேலே என்பதால் என்னை தேவன் என்று அழைகிறார்கள். நான் கரு(தாயின் கரு ) என்ற ஊரில் பிறந்த மனிதனல்ல தேவன் இனத்தை சார்ந்தவன் நான் சொல்லுவது சாதியை அல்ல என் நிலையை.

இதை பற்றிய உங்கள் கருத்தை பதியவும்

No comments:

Post a Comment