Saturday, July 6, 2013

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை !!!!!!!

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது இது தற்போதைய காட்டுமன்னார்கோவில். அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்

“பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர"

உடையாற்குடிகு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார் இதன் கருத்து "வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி
ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேறவேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு

கருவூரார் பெயர் காரணம்.

கரூரில் பிறந்த காரணத்தாலே தான் அவரு கருவூர் தேவர் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டு இருகின்றோம் ஆனால் நான் உடையார் நாவலில் ஒரு செய்தியை படித்தேன் அதில் கருவூராரிடம் ஒருவன் வந்து நீங்கள் பிறந்த கருவூர் எங்கு உள்ளது???? என்று கேட்க

அதற்கு அவர் என் தாயில் கருப்பைதான் என் ஊர், என் தாய் எங்கிருந்தால் என்று எனக்கு தெரியாது அதை பற்றி நான் கவலை படவில்லை என் தாயின் ஊருக்கு நான் வந்ததும் (கருப்பையில்) அந்த ஊர் பற்றி நான் தெள்ள தெளிவாக புரிந்துகொண்டுவிட்டேன் என் தாயின் ஊரின் நான் வளர்ந்த ஒரு ஒரு நொடியும் எனக்கு நினைவு இருக்கிறது வெறும் ஆத்மாவாக அங்கு இருந்ததும் நல் ஆதமாவாக மலரவைததும் அங்குதான் உடம்பில் உள்ள அவையங்களுக்கு புத்தி கட்டளையிட்டதும் நன்றாக நினைவில் இருக்கிறது

எல்லா மனிதர்களுக்கு கருவில் இருந்தது நினைவில் இராது அதானால் அவர்கள் மனிதன்ர்கள். கருவில் வாழ்ந்த காலம் எவனுக்கு நினைவில் இருகின்றதோ அவன் தேவன். நான் சாதாரண மனிதன் அல்ல மனிதற்கு மேலே என்பதால் என்னை தேவன் என்று அழைகிறார்கள். நான் கரு(தாயின் கரு ) என்ற ஊரில் பிறந்த மனிதனல்ல தேவன் இனத்தை சார்ந்தவன் நான் சொல்லுவது சாதியை அல்ல என் நிலையை.

இதை பற்றிய உங்கள் கருத்தை பதியவும்