Saturday, October 12, 2013

தஞ்சை கோட்டை !!!!!!




தஞ்சையில் கோட்டை பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. 

திருமங்கயாழ்வார் பாடலில் 

"வம்புலான் சோலை மாமதில் தஞ்சை

என்றும் கருவூறார் திருவிசைபாவில் 

"மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை 
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே "

வடவாற்று நீர் தஞ்சை தஞ்சை கோட்டைக்கு வந்ததை கருவூர் தேவர் குறிப்பிடுகிறார். ராஜ ராஜ சோழன். தஞ்சை நகரை இரண்டாக பிரித்து உள்ளலாலை(City),புறம்படி (Suburban) என நகரை பிரித்து அழகாக நகரமைப்பு(Town planning) செய்தார்.உள்ளாலை கோட்டைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

பெருவுடையார் கோவிலை சுழ்ந்துள்ள கோட்டை சிவகங்கா கோட்டை அல்லது சின்னகோட்டை எனப்படும்.செவ்வப்ப நாயக்கர் கட்டியது. அதன் பரப்பளவு 36 ஏக்கர்.1779 இல் ஸ்வார்ட்ஸ் கட்டிய கிறிஸ்து நாதர் தேவாலயம் இக்கோட்டைக்குள் உள்ளது, அங்கு வாழ்ந்தவர்கள் சின்னக்கோட்டை கிருஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர். துளாச காலத்தில் அவர்களுக்கு மகர்நோன்புசாவடியில் இடம் அளிக்கப்பட்டது. சிவகங்கை குளம் இக்கோட்டையில் அடங்கும்.

தஞ்சை நகரக் கோட்டை மிகப்பெரியது 530 ஏக்கர் பரப்பு உடையது. இக்கோட்டையை கருடக்கொடி என்று அழைப்பர். கருடன் வடிவில் அமைத்தால் இப்பெயர் வந்தது . இக்கோட்டையில் யாரும் பாம்பு கடித்தால் கூட மரணம் அடைவது இல்லை என்ற கதைகளும் உண்டு. கோட்டையை சுற்றி 8 காவலர் கோபுரங்கள் உள்ளன.




1 comment:

  1. i came to knw abt ur love on thanjavur. gud keep it up.

    ReplyDelete