Tuesday, March 13, 2012

கண்டேன் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவரை !!!!!!!!!


உடையார் நாவலை ஒரு வழியாக முழுமையாக படித்து விட்டேன் அதில் பெரிய கோயில் முடியும் தருவாயில் இருக்கும் பொழுது அந்த கோயில் கட்ட உதவி புரிந்த அனைவரின் பெயரையும் அவசியம் குறிப்பிட வேண்டும் என்று மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜ ராஜா தேவர் கூறிய படி அனைவரின் பெயரும் கல்வெட்டில் செதுக்க பட்டது அப்பொழுது தனது பெயரை நமது மாமன்னர் தொட்டு தடவி ரசித்தாராம் நம் அனைவருடைய பெயரும் இந்த சந்திர சூரியன் உள்ளவரை நிற்க போகிறது தமிழரின் நாகரிகம் பண்பாட்டை இந்த உலகமே வியந்து போற்ற போகிறது இது என் ஒருவனால் நிகழ்ந்தது அன்று ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உழைப்பு (ஏனென்றால் இந்த கோயில் கட்டும் பணியில் சோழர்கள் மட்டும் அல்லாது பாண்டிய தேசத்தை சேர்ந்த மக்களும் நிறையவே உழைத்து இருகின்றார்கள் என்பதால் தமிழர்கள் என்று சொல்லி இருகின்றார் ) என்று நெஞ்சுருக பேசுவதாக ஒரு காட்சி வரும் இந்த காட்சியை விளக்கி விட்டு நாவல் ஆசிரியர் பாலகுமாரன் இப்படி நம் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமனார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் எழுப்பிய பெரிய கோவிலை நாம் செல்லும் போது இது ராசா ராசா மாமன்னன் நடந்த இடம் அங்கே நாமும் நடக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள் தமிழரின் பெருமை சந்திர சூரியன் உள்ளவரை பறை சாற்றும் நமது பெரிய கோவிலை எழுப்பிய நமது மாமன்னன்னை போற்றுங்கள் அப்படியே அவர் கை வைத்து தடவி பார்த்த அவருடைய பெயர் உள்ள இடத்தை அவசியம் தடவி பார்த்துவிட்டு வாருங்க அது நமது ராசா ராசா சோழனை வருடைவதை போல் நமக்குள் வரும் அந்த உணர்வை உணர்ந்து மெய் சிலிர்த்து போங்கள் அவருடை பெயர் சிவன் சன்னதி விட்டு வரும் வழியில் உள்ள படி கட்டின் அருகில் உள்ள சண்டிகேஸ்வரர் ஆலையத்தின் எதிர் புறம் இருக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார் அதை படித்த உடனே அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்றும் அவரின் பெயரை என் கைகளால் வருட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் வந்தது உடனே கோவிலுக்கு சென்று அந்த இடத்தில தேடவேண்டும் என்ற ஆவல் என் மனதில் தோன்றியது ஆனால் ஒரு சிறு குழப்பம் என் மனதில் ஓடியது அது என்னவென்றால் பண்டையக்கால தமிழ் எழுத்துக்கள் என்னால் படிக்க இயலாதே என்னால் கண்டறிய முடியுமா என்ற சிறு ஐயப்பாடு என் மனதில் இருந்தாலும் ஒரு தேடுலோடும் நான் மிகவும் மதிக்கும் மிகவும் அன்பு வைத்திருக்கும் உடையார் ஸ்ரீ ராச ராச தேவர் எனக்கு தெரியாமல் போய் விடுவாரா அவர் மிது நான் வைத்து இருக்கும் அன்பு உண்மை என்றால் அவரின் பெயரை என்னால் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையோடு சென்ற என்னை உடையார் ஸ்ரீ ராச ராச தேவர் கைவிடவில்லை எனக்கு அவர் காட்சி தந்தார் இதோ அவரின் பெயரை நீங்களும் பார்க்க இங்கே பகிர்ந்து கொள்கிறேன்